மகாத்மா காந்தி வரலாறு | Mahatma Gandhiji History in Tamil

மகாத்மா காந்தி வரலாறு  | Mahatma Gandhiji History in Tamil

Surya DCE

மகாத்மா காந்தி சுயசரிதை - Mahatma Gandhi Biography

பெயர்: மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi)
பிறப்பு: 2-10-1860
மனைவி: கஸ்தூரிபாய் காந்தி (Kasthuribai Gandhi)
தந்தை: கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (Karamchand Uttamchand Gandhi)
தாய்: புத்லிபாய் காந்தி (Putlibai Gandhi)
தேசியம்: இந்தியா (Indian)
தாய் மொழி: குஜராத்தி (Gujarati)
இறப்பு: 30-01-1948
Mahatma Gandhi
இந்தியா சுதந்திரத்திற்கு பின்னால் பல போராட்டங்கள், இழப்புகள் மற்றும் சோகங்கள் என பல உண்டு. அதில் அனைவரையும் திருப்பி பார்க்கும் அளவிற்கு வரலாறு படைத்தவர்தான் மகாத்மா காந்தி. வாங்க அந்த வரலாற்று பக்கங்களை புரட்டி பார்க்கலாம்.

உலகில் முதலில் பிறந்த நேரம் - பிறப்பு (Mahatma Gandhi Birthday Date)

மோகன்தாஸ் காந்தி (Gandhi) அக்டோபர் 2 - 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் (India) உள்ள குஜராத் (Gujarat) மாநிலத்தில் இருக்கும் போர்பந்தர் எனும் ஊரில் கரம்சந்த் காந்தி (Karamchand uttamchand Gandhi) மற்றும் புத்திலிபாய் (Putlibai Gandhi) ஆகிய இருவருக்கும் மகனாய் (Son) பிறக்கிறார்.

திருமணம் (Mahatma Gandhi Marriage)

காந்தி தனது 13 வயதிலேயே கஸ்தூரிபாய் (Kasthuribai Gandhi) என்ற ஒரு பெண்ணைத் திருமணம் (Marriage) செய்து கொள்கிறார். பிறகு இவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. இப்படியே காலம் கடந்து செல்ல தனது 16 வயதில் அவருடைய தந்தையை இழக்கிறார் (Karamchand uttamchand Gandhi Death) காந்தி.

கல்வி (Mahatma Gandhi school and college Education)

தனது பள்ளிப் படிப்பின் போது சாதாரண ஒரு மாணவனாக காணப்பட்ட காந்தி, தனது 18 வயது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வழக்கறிஞர் படிப்பிற்காக (Attorney Education) காந்தி இங்கிலாந்து (England) செல்கிறார். அங்கு சென்ற காந்தி தனது படிப்பை வெற்றிகரமா முடித்தார்.

செய்த பணிகள் (Mahatma Gandhi work in south Africa)

படிப்பை முடித்துவிட்டு காந்தி மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு (India) வந்தார். அங்கு வந்த காந்தி மும்பையில் வழக்கறிஞர் (Attorney job) பணியாற்றினார். இந்த வேலை சரியாக அமையாததால், அவருடைய அண்ணன் ( Gandhi brother) இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு காந்தி செல்கிறார். அங்கு இருக்கும் நீதிமன்றத்தில் வழக்குகள் வாதாட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் ஒரு சாதாரண பணியில் ஈடுபட்டார்.

காந்திக்கு, இந்த நீதிமன்றத்தில் வேலை செய்த ஆங்கிலேய அதிகாரிகளிடம் பிரச்சனை ஏற்பட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த காந்தி, அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் (South Africa) அவர் தகுதிக்கேற்ற ஒரு வேலை இருப்பதை காண்கிறார். 1893 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார்.

தொடங்கியக் கட்சி (Mahatma Gandhi political)

காந்தி தென்னாபிரிக்காவில் (South Africa) பணியாற்றிய போது, அங்கு நிலவிய ஆங்கிலேய ஆட்சியின் நிறவேறுபாடும், இனப்பகுபாடு அதிகமாக இருந்ததை கண்ட காந்தி, இதுவரையிலும் அரசியல் (Politics) ஈடுபாடு இல்லாமல் தன் குடும்பம், தன் வாழ்க்கை என இருந்தர். அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக பின்னால் இவர் மாபெரும் ஒரு அரசியல்வாதியாக உருவாக காரணமானது.

தனது வேலை காலம் முடிந்து தாயகம் திரும்பிய காந்தி, அங்கு சென்று தன் நண்பர்களுடன் சேர்ந்து 1894 - ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற ஒரு பெயரில் கட்சியை தொடங்குகிறார். இதன் மூலம் இந்தியர்களை ஒன்றிணைத்து தனது உரிமைக்காக குரல் கொடுக்க இவர் ஊக்கப்படுத்தினார்.

அறவழிப் போராட்டம் (Mahatma Gandhi struggle)

பிறகு தென்னாபிரிக்காவில் (South Africa) ஒரு நகரில் நடந்த போராட்டத்தில் காந்தி முதல்முறையாக சத்தியாகிரகம் எனப்படும், அறவழிப் போராட்டத்தை 1906 -ஆம் ஆண்டு ஈடுபடுத்தினார். இந்தப் போராட்டத்தில் பண்புகள் அகிம்சை, ஒத்துழைமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல். இந்த போராட்டத்தின் போது காந்தியுடன் சேர்ந்து போராடிய அனைவரும் பலமுறை சிறைச்சாலைக்கு சென்று இருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் நிறுத்தாமல் தொடர ஆங்கிலேயர்களும் அங்குள்ள பொதுமக்களும் இவர்களின் நேர்மையும், கொள்கையும் சரியாக இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். பல போராட்டத்திற்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக முதல் வெற்றியை கண்டார் காந்தி.

வரவேற்பு (mahatma Gandhi wlcome india)

மீண்டும் தாயகம் திரும்பிய காந்திக்கு பல வரவேற்புகள் 1915-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. காந்தி தனது தோற்றத்தில் முற்றிலுமாக மாறி இருந்தார். அவர் விவசாய (Farmer Dress) உடையில் காட்சியளித்தார்

இந்திய விடுதலைப் போராட்டம் (Mahatma Gandhi freedom Indian struggle)

1930 -ஆம் ஆண்டு இந்தியாவில், இந்தியர்களால் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு (Salt) ஆங்கிலேய அரசு வரி (Tax) விதித்தது. அதுமட்டுமில்லாமல் தயாரிக்கப்படும் உப்பை (salt) பிரிட்டிஷ் அரசாங்கத்தை (British Government) தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தது.இந்தக் சட்டத்தை நீக்கக் கோரி காந்தி கொடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

சரி இதற்கு வேறு வழியில்லை போராடித்தான் ஆக வேண்டும், என்று, காந்தி 1930 -ஆம் ஆண்டு அன்று சத்தியாகிரக (salt Satyagraha) முறையில் கடலோரத்தில் நடைபயணம் (salt march) தொடங்குகிறார். வழியில் கடலில் உப்பு காய்ச்சினார். அனைத்து இந்தியர்களையும் உப்பு தயாரித்து (salt make) பயன்படுத்தச் சொன்னார். இவர் சொன்னதை போல் பல இடங்களில் உப்பு தயாரித்து இந்தியர்களே பயன்படுத்த தொடங்கினர். இதனால் பல இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

பல போராட்டங்களுக்கு பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் (British Government) வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் (British Government) வரியை (Tax) நீக்கியது. இந்த நிகழ்வு உப்புசத்தியாகிரகம் (salt Satyagraha) என அழைக்கப்படுகிறது.இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள்இந்தியா சுதந்திரம் பெற்றது.

காந்தி செய்த போராட்டங்கள் (Mahatma Gandhi India struggle for freedom)

1942 -ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
1906 -ஆம் ஆண்டு சத்தியாகிரகம் - அகிம்சை (Nonviolence) எனப்படும் அறவழிப் போராட்டம்.
1930 -ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக (Salt Satyagraha) போராட்டம்.
இந்திய விடுதலைக்காக (India Struggle for freedom) பல உண்ணாவிரதப் போராட்டங்கள (Hunger strike).

மகாத்மா காந்தியின் அரசியல் குரு (Mahatma Gandhi political Guru Gopal krishna gokhale)

மகாத்மா காந்தி கூறிய போது, கோபால் கிருஷ்ணா கோகலே (Gopal krishna gokhale) தனது அரசியல் குருவாக இருந்தவர் எனக் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது கோபால் கிருஷ்ணா கோகலே அவர்களால் தனிப்பட்ட முறையில் சிறப்பாக வழிநடத்தப்பட்டார்.

உலகை விட்டு பிரிந்த நேரம் - இறப்பு (Mahatma Gandhi Death Date)

காந்தி பல கஷ்டங்களையும் பல போராட்டங்களையும் கடந்து பல வெற்றிகளை பார்த்த இவர் 1948 -ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் இறுதி நாளாக இருக்கும் என்று எதிர்பாராமல் இருந்த அந்த நேரத்தில், டெல்லி பிர்லா மாளிகையில் (Delhi Gandhi Birla house) தோட்டத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் காந்தி. உயிர் விட்டு பிரிந்தாலும் இவர் உழைப்பு இந்த உலகை விட்டுப் பிரியவில்லை.

காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti History)

இந்திய நாட்டின் நலனுக்காக போராடி தன் உயிரை கொடுத்த தலைவரான மகாத்மா காந்தி (Mahatma Gandhi) என்னும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி (2/10/1860) காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தி ரூபாய் நோட்டுகளில் இடம் பெற காரணம் | Why Mahatma Gandhi in Indian Rupees?

தேசத்தின் தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியாவிற்காக பல போராட்டங்களையும் மற்றும் பல இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் உடன் சேர்ந்து போராடினார். அவருடைய சாதனைகளையும் அவர் செய்த போராட்டங்களையும் நினைவுகூறும் விதமாக அவரது புகைப்படத்தை இந்தியா நாணய நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டது. நாம் இந்திய ரூபாய் நோட்டுகளில் பார்க்கும் காந்தியின் புகைப்படம் 1994 ஆம் ஆண்டு முதல் முதலில் நடைமுறைக்கு வந்தது.

இந்த வரலாறு உங்கள் நண்பர்கள் படிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்கள்.

இதுபோன்ற தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் மேலும் படிக்கவும் நன்றி!!!

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.